சபை ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பளை பளைவீமன்காமம் பொதுச்சந்தையின் எல்லைமதில் மற்றும் புனரமைப்பு வேலைகள் நிறைவுபெற்று புதுப்பொலிவுடன் மக்கள் பாவனையில் (February 2024 )


சபை ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பளை பளைவீமன்காமம் பொதுச்சந்தையின் எல்லைமதில் மற்றும் புனரமைப்பு வேலைகள் நிறைவுபெற்று புதுப்பொலிவுடன் மக்கள் பாவனையில் (February 2024 )


உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு சனசமூக நிலையங்களை வலுப்படுத்துவதனூடாக அவற்றின் சபையுடனான ஒன்றிணைந்த செயற்பாடுகளை மேம்படுத்தல், சமூக பொறுப்பை வலிதாக்கல் மற்றும் சமுதாயத்தில் விளையாட்டினை ஊக்குவித்தல் ஆகியவற்றினை நோக்காக கொண்டு வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கிடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட போட்டிகளில் 11.12.2023 நேற்றைய தினம் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.




கடமைசார் விடயங்கள் தொடர்பில் அட்டவணைப் படுத்தப்படாத பதவியணியினருக்காக ஒழுங்கமைக்கப்பட்ட ஒருநாள் பயிற்சி வகுப்பு (கட்டம் 1) 15.12.2023இன்று வட மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகினால் நல்லூர் பிரதேச சபை பயிற்சி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.


2024 ஆம் ஆண்டின் இலத்திரனியல் நூலக செயற்பாட்டிற்கு முன்னோடியாக பெளதிக வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் தெல்லிப்பளை பொது நூலகத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் பொது மக்களின் பார்வைக்கு



இன்றைய தினம் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க வாலிபர்கள் இளவாலை கிராமத்தில் டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை சுயவூக்கத்தின் அடிப்படையில் மேற்கொண்டனர்.
நீர் தேங்கக்கூடிய டெங்கு நுளம்பு பரவ சாதகமான கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டு பிரதேசசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாது பங்குகொண்ட வாலிபர்களுக்கும், சபை பணியாளர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். வலி வடக்கின் ஏனைய இளையோர் அமைப்பினரும் இவ்வாறான சூழல் சார் சமூக கடமைகளை ஆற்ற முன்வரவேண்டும் என்பதுடன் அதற்கு எப்போதும் பிரதேசசபை ஒத்துழைப்பை நல்க காத்திருக்கிறார்கள் என்பதையும் தங்களுக்கு அறியத்தருகின்றோம்.



தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் MOTHER Sri Lanka உயர்தர மாணவர் மன்றம், மற்றும் மாணவர் பாராளுமன்றம் ஆகியோர் இணைந்து சபையின் பங்களிப்புடன் தெல்லிப்பளை கொத்தியாலடி இந்து மயானத்யில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட நிகழ்வின் பதிவுகள்


2023 ஆம் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் நிலையான வருமானத்தினை பெற்றுக் கொடுப்பதனூடாக வறுமையை ஒழிக்கும் பொருட்டு வாழ்வாதாரத்தினை பெற்றுக் கொடுக்கும் முகமாக வலிகாமம் வடக்கினுள் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட இரண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


வரவு செலவுத்திட்டம் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களின் தொடர்ச்சியாக தற்பொழுது மயிலிட்டி உப அலுவலகத்தின் அபிவிருத்தி பணிகளுக்கான வேலைத்திட்டம் கேள்வி கோரப்பட்டுள்ளது.



சபையின் 2024ஆம் ஆய்டிற்கான தேனவரி அறவீட்டிற்கான நடமாடும் சேவைகள் தற்பொழுது மல்லாகம் உப அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெற்று வருகின்றது. எனவே பொதுமக்கள் இதில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனi;.
