2023 ஆம் ஆண்டின் செயற்பாடுகளுக்கமைய சனசமூக நிலையங்களை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற தரப்படுத்தல் அடிப்படையில் கலைநகர், அளவெட்டி தெற்கு கலைவாணி சனசமூக நிலையம் முதலாம் இடத்தினையும் பன்னாலை கணேசா சனசமூக நிலையம் இரண்டாவது இடத்தினையும் தெல்லிப்பளை கிழக்கு திருமகள் சனசமூக நிலையம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளன என்பதுடன்
A தரத்தில் 2 சனசமூக நிலையங்களும்,
B தரத்தில்18 சனசமூக நிலையங்களும்,
C தரத்தில் 20 சனசமூக நிலையங்களும்,
D தரத்தில் 35 சனசமூகநிலையங்களும்,
E தரத்தில் 9 சனசமூக நிலையங்களும் தரநிலையடைந்துள்ளன.
குறித்த சனசமூக நிலையங்களுக்கான சபைநிதியிலிருந்து வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையானது உரிய சனசமூக நிலையங்களின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.


