வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளரினைத் தெரிவு செய்யும் கூட்டமானது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி.தேவந்தினி பாபு அவர்களின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் அவர்களும் துணைத் தவிசாளராக பொன்னுத்துரை தங்கராசா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாழ்த்துக்கள்… இருவருக்கும் மற்றும் அனைத்து கெளரவ உறுப்பினர்களுக்கும்.
